முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய 5 பேர் கைது - தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகர் மீது தாக்குதல் என புகார்

தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதை தட்டிக் கேட்ட அதிமுக பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியதாக திமுகவினர் 5 பேரை கரூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2020-05-17 03:09 GMT
தமிழக முதலமைச்சரை அவதூறாக பேசியதை, தட்டிக் கேட்ட அதிமுக பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியதாக திமுகவினர் 5 பேரை கரூர் போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் எல்.ஜி.பி. நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் அளித்துள்ள புகாரில்,திமுகவை சேர்ந்த ரீகன், கௌதமன், தீபக், சூரியன், ராஜேஷ்கண்ணா என்பவர்கள் சமூக வலைதளங்களில் முதலமைச்சரையும், தமிழக திட்டங்கள் குறித்தும் அவதூறு பரப்பிய வந்ததால், தட்டி கேட்டதற்காக தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்