Ex-CM, அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு

Update: 2024-04-30 10:45 GMT

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணையை ஜூன் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. இந்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் வகையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்திருந்தார். தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் வாதத்துக்காக வழக்கு இன்று தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று நீதிபதி வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 7ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்