அடுத்தடுத்த 4 வீடுகள் தீக்கிரையான சோகம் - 20 சவரன் நகை, ரூ.2.5 லட்சம் பணம் தீயில் கருகியது
சீர்காழியில் அடுத்தடுத்து நான்கு வீடுகள் தீக்கிரையான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியில் அடுத்தடுத்து நான்கு வீடுகள் தீக்கிரையான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் அருகே பனங்காட்டாங்குடியை சேர்ந்த சேகர் என்பவரது வீடு மின்கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது. காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ, அருகில் இருந்த அவரது சகோதரர்கள் வீடுகளுக்கும் பரவியுள்ளது. அடுத்தடுத்து நான்கு வீடுகள் தீக்கிரையானதில், 20 சவரன் தங்க நகை, இரண்டரை லட்சம் ரூபாய் பணம் தீயில் கருகியது.