கள்ளத்தனமாக வீட்டில் சாராயம் விற்ற நபர்... தட்டிக்கேட்ட நபரைக் குடும்பமாக கொன்ற கொடூரம்

Update: 2024-05-08 02:28 GMT

பெரம்பலூர் பாடாலூரைச் சேர்ந்த ஆனந்தகுமார்-கல்பனா தம்பதிக்கு 1 மகனும் 2 மகள்களும் உள்ளனர். ஆனந்த குமாரின் வீட்டின் அருகே வசிக்கும் சுரேஷ், அனுமதியின்றி மதுபானங்களை கள்ளத்தனமாக வீட்டில் வைத்தே விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் மது வாங்க சுரேஷ் வீட்டிற்கு வருபவர்கள் தவறுதலாக ஆனந்த குமாரின் வீட்டுக்கு சென்று மது பாட்டில் கேட்பதால் ஆத்திரம் அடைந்த ஆனந்த குமார் சுரேஷிடம் இது குறித்து பலமுறை முறையிட்டுள்ளார். ஆனந்தகுமார் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். கோபம் கொண்ட சுரேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ஆனந்த குமாருக்கும் சுரேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைலப்பாகி உள்ளது... ஒரு கட்டத்தில் சுரேஷ், அவரது மனைவி கீதா, 17 வயது மகன் மற்றும் உறவினரின் மகன் ஆகிய 4 பேரும் ஆனந்த குமாரின் மீது கல்லைக் கொண்டு எரிந்துள்ளனர்... நிலைகுலைந்து போன ஆனந்தகுமாரை சுரேஷ் அவரது வீட்டின் சந்து பகுதிக்கு இழுத்துச் சென்று பெரிய இரும்பு கம்பியை எடுத்து முதுகில் குத்தியதில் ஆனந்தகுமார் அங்கேயே உயிரிழந்தார்... கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சுரேஷ், கீதா, மற்றும் 2 சிறுவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்... சுரேஷிற்கு பிரஷர் அதிகமாக உள்ளதால் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளார். இன்று மாலைக்குள் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்