ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார அனுமதி மறுப்பு - திமுக முன்னாள் எம்.எல்.ஏ போராட்டம்
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள, ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார, அனுமதி வழங்காததை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள, ஆலந்துறை அணைக்கட்டு பகுதிகளை தூர்வார, அனுமதி வழங்காததை கண்டித்து, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்தும், வனத்துறை அனுமதி வழங்காததை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். வனத்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து, வருகிற 26ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக, அப்பாவு தெரிவித்தார்.