கேக்கில் பல்லி..முறுக்கில் பூரான்..! மக்களை அதிர வைத்த கடைகள் - அடுத்து பறந்த அதிரடி நடவடிக்கை

Update: 2024-05-04 02:07 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கேக்கிற்குள் கிடந்த பல்லியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாயகியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பேக்கரியில், தம்மம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் கேக் வாங்கியுள்ளார். அதனை பிரித்து சாப்பிடும் போது, கேக்கிற்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணை, அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், தனியார் பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்