5 கப் சாம்பியனுக்கு வந்த சோதனை... மொத்தமாக முடிந்த பிளே ஆப் வாய்ப்பு

Update: 2024-05-04 02:15 GMT

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய கொல்கத்தா 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. பின்னர், 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி,18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் சூர்யகுமார் யாதவ், அதிகபட்சமாக 56 ரன்களும், டிம் டேவிட் 24 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதை அடுத்து, மும்பை அணியின் பிளே ஆப் கனவும் தகர்ந்தது....

Tags:    

மேலும் செய்திகள்