உணவக உரிமையாளரை தாக்கிய சம்பவம் - போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

Update: 2024-05-04 01:48 GMT

சென்னை பட்டினம்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில், உணவக உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் காருக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் மணிவண்ணனை போதையில் இருந்த ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், திருவொற்றியூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, அவருடைய தந்தை சுடலையாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கோபிநாத், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏற்கெனவே பல ஆண்டுகளாக பணியிட நீக்கம் செய்யப்பட்டு இருந்த அவர், நன்னடத்தை அடிப்படையில் மீண்டும் காவல்துறையில் சேர்க்கப்பட்டு கடந்த ஓராண்டாக ஏ.ஆர். போலீசில் பணிபுரிந்து வந்தார். தற்போது, உணவக உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் பணியிடை நீக்கம் செய்து ஆயுதப்படை துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்