திடீரென இருண்ட வானம்... கொளுத்தும் வெயிலுக்கு குட்பை - இடி, மின்னலுடன் வந்த கனமழை

Update: 2024-05-04 01:53 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், போளூர் அடுத்த ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் திடீரென கோடை மழை கொட்டி தீர்த்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது பெய்த மழையால் பொது மக்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்