ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி கொலை : உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை

ஒசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2019-03-13 02:11 GMT
கர்நாடக மாநிலம் மங்கமனப்பாள்யா பகுதியை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். வழிப்பறி, கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளிலும் அவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர், மங்கமனப்பாள்யா பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில் ஒசூர் அருகேயுள்ள தேன்கனிக்கோட்டையில் வசிக்கும் தனது நண்பர் நஷிரை பார்க்க இஸ்மாயில் சென்றுள்ளார். அப்போது இஸ்மாயிலை பின்தொடர்ந்து வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல், நஷிரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த இஸ்மாயிலை பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். அதில் பலத்த காயமடைந்த இஸ்மாயில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திக்கு வந்த தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்