தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் : சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக ஜாபர் சேட் நியமனம்

தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-03-06 20:00 GMT
தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக போலீஸ் அகாடமி திட்ட அதிகாரியாக இருந்த ஜாஃபர் சேட், சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  குழந்தை மற்றும் மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.யாக அருணாச்சலம் நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை விசாரிக்கும் பிரிவு  எஸ்.பிக்களாக சோனல் சந்திரா மற்றும் பழனிகுமார் நியமிக்கப்பட்டு உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்