மாணவர்களுக்காக குரல் எழுப்பிய ஈபிஎஸ் | EPS | ADMK | Government

Update: 2024-05-26 13:43 GMT

லேப்டாப் வழங்க வேண்டும் என்ற அரசுப்பள்ளி மாணவர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பை இந்த ஆண்டாவது திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கில், அதிமுக அரசால் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த லேப்டாப்களை திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். புதிய கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், லேப்டாப் வழங்குவது குறித்து அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்