"ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லை" - திருமாவளவன்

Update: 2024-05-26 14:26 GMT

பிரதமர் அண்மை காலமாக பேசி வருகிற கருத்துகள், அவர், தோல்வி பயத்திலும், பதற்றத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை புரைவாக்கத்தில் அனைத்திந்திய பாங்க் ஆஃப் பரோடா ஒபிசி தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் சார்பில், 8-ஆவது ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், இந்த தேர்தலில் மக்கள் சமூக நீதியின் பக்கம் தான் இருக்கிறார்கள் என்று கூறினார். பிரதமர் மோடி தோல்வி பயத்தால் ஏதேதோ பேசி வருவதாக விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்