இரவு பகலாக தொடரும் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்..!

பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2018-09-25 02:04 GMT
கடந்த சில மாதங்களுக்கு முன்பு  போராட்டம் நடத்திய போது, பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளதாக அரசு அறிவித்ததை இன்னும் நிறைவேற்ற வில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டு.  கூறி பகுதி நேர ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் நேற்று காலை தொடங்கிய உள்ளிருப்பு போராட்டத்தை இரவிலும் தொடர்ந்தனர். 30 க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர் .இரவில்  தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதி இல்லாமல் பகுதி ஆசிரியர்கள் பெரும் அவதிகுள்ளானார்கள் .
Tags:    

மேலும் செய்திகள்