முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை - கடன் தொல்லையே காரணம் என போலீஸ் தகவல்

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணத்திற்கு கடன் தொல்லையே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Update: 2019-08-16 10:37 GMT
சென்னை மயிலாப்பூரில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணத்திற்கு கடன் தொல்லையே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கியில் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாததால், மன உளைச்சலுக்கு ஆளான அவர், இந்த விபரீத முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வி.பி.சந்திரசேகர் இறப்பதற்கு முன், யாரிடம் பேசினார் என்பதை கண்டறிய அவரின் செல்போன் தொடர்புகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்