சேலம் வந்தடைந்த ஈபிஎஸ் - விமான நிலையத்தில் நெகிழ்ச்சியடையவைத்த தொண்டர்கள்

Update: 2024-04-25 12:46 GMT

சேலம் வந்தடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, அதன் பின்னர் சென்னைக்குச் சென்று கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இன்றைய தினம் சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் சேலம் வந்தடைந்தார். அவருக்கு ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்