நெல்லையில் நடந்த மர்ம மரண விவகாரம்.. எல்.முருகன் போட்ட பரபரப்பு ட்வீட்

Update: 2024-05-05 06:18 GMT

காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் மரண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டறிய வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ஏப்ரல் 30-ஆம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல்துறையிடம் புகாரளித்தும் நடவடிக்கைஎடுக்காமல் இருந்தத ன் விளைவாகவே, ஜெயக்குமாரின் மரணம் நடந்தேறியுள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். ஒரு தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளர் புகாரளித்தும் அவரின் உயிரைக் காப்பாற்றாத அரசு, சாதாரண பொதுமக்களை எப்படி பாதுகாக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்