"பிரதமர் பதவிக்கு காங்.உரிமை கோரும்" - குலாம் நபி ஆசாத் கருத்து

இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் சிறிதளவும் உண்மையில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-17 08:24 GMT
இந்தியாவின் பிரதமர் பதவியை காங்கிரஸ் விரும்பவில்லை என்ற தகவலில் சிறிதளவும் உண்மையில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சி உரிமை கோராது என யாரும் கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பாரம்பரிய மிக்க, பழமையான கட்சி காங்கிரஸ் என்றும், 5 ஆண்டுகள் ஆட்சி செய்திட, அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கிட வேண்டியது அவசியம் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்