பாதுகாப்பு வலையில் இறங்கி போராட்டம் நடத்திய நபர்

மஹாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் பரபரப்பு

Update: 2019-01-08 12:07 GMT
மஹாராஷ்ட்ரா மாநில தலைமைச் செயலக கட்டடத்தில், பாதுகாப்பிற்காக விரிக்கப்பட்டிருக்கும் வலை மீது ஏறி போராட்டம் நடத்திய நபரால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. லக்‌ஷ்மன் சாவன் என்ற அந்த நபர், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பெண் முதலமைச்சர் வேண்டும், சாலைகளை சரி செய்ய வேண்டும், பள்ளிக் கட்டணங்களை குறைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருக்கும் பாதுகாப்பு வலை மீது ஏறி அமர்ந்தார். கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் கீழே இறங்குவேன் என மிரட்டிய அவரை, பலத்த சிரமத்திற்கு பிறகு காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்