வேட்புமனு தாக்கல் செய்த ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன்

Update: 2024-04-29 13:31 GMT

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், காண்டே சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். ஜேஎம்எம் எம்எல்ஏ சர்ஃபராஸ் அகமது ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதியில் கல்பனா சோரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் மைத்துனர் பசந்த் சோரன் உள்ளிட்டோரும், வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்றனர் .

பாஜக சார்பில் திலீப் வர்மா போட்டியிடுகிறார். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்