EVM மெஷின்- VVPAT வழக்கு.. நீதிபதிகள் சொன்ன பதில்

Update: 2024-04-29 13:37 GMT

ஈவிஎம்களில் பதிவாகும் வாக்குகளை விவிபேடுகளுடன் முழுமையாக சரிபார்க்க கோரும் மற்றொரு பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக ஃபரிதாபாதை சேர்ந்த மோஹித் குமார் பண்டாரி தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈவிஎம் மற்றும் விவிபேடு எண்ணிக்கை தொடர்பான பொதுநல மனுவை உச்சநீதிமன்றத்தில் மற்றொரு அமர்வு விரிவாக விசாரித்து தீர்ப்பளித்துவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, இந்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்