நீச்சல் பழக சென்ற குடும்பம்.. தாயுடன் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் - பரிதாபமாக மடிந்த உயிர்கள்

Update: 2024-04-29 13:39 GMT

அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷ் - பவித்ரா தம்பதிக்கு 10 வயதிற்குள் அடங்கிய 2 குழந்தைகள் இருந்தன. வீட்டிற்க்கு அருகே உள்ள கிணற்றில் நீச்சல் பழக்குவதற்காக, பவித்ரா தனது 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பவித்ரா மற்றும் குழந்தைகள் 2 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், சுமார் ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பின்னர் 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்