திடீரென தனியார் பள்ளி வெளியிட்ட அறிவிப்பு - அதிர்ச்சியில் மாணவர்கள்,பெற்றோர்கள்..ஆட்சியர் அலுவலகத்திற்கு பறந்த மனு

Update: 2024-04-29 13:34 GMT

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே, மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட தனியார் பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெங்கட்ராயபுரம் பகுதியில், கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்காக, மரியா கிரேஸ் ரூரல் எஜூகேஷன் சொசைட்டி என்ற நிறுவனம் மூலம் கடந்த 1990 ம் நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் இப்பள்ளியில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்தனர். தற்போது, உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வரும் நிலையில், நிதி நிலைமை காரணமாக, அடுத்து ஆண்டு முதல் பள்ளி செயல்படாது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மாணவர்களும், பெற்றோரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 34 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியை மூடக்கூடாது என்றும், அரசே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்