நாளை மறுநாள்.. கொளுத்தும் வெப்பத்திலிருந்து காக்க வரும் மழை...

Update: 2024-04-29 13:39 GMT

வரும் 1ம் தேதி வரை குமரி, நெல்லை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 தினங்களுக்கு, வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. அடுத்த 2 தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்