"பதவிகள் ஏதும் பெறாமல் அரசுக்கு ஆதரவு அளிப்போம்" - இலங்கை எதிர்கட்சி தலைவர் பேட்டி

இலங்கை அமைச்சரவையில் பதவிகள் ஏதும் பெறாமல், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.

Update: 2022-05-17 02:21 GMT
இலங்கை அமைச்சரவையில் பதவிகள் ஏதும் பெறாமல், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கூறியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது நாடு நெருக்கடியில் உள்ளதாகவும் அந்நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக கூறினார். அதே சமயம், மற்ற கட்சி எம்.பி.க்களை ஆதரவாக்கி கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டால் அந்த ஆதரவும் அரசுக்கு கிடைக்காது என சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்