கொதிக்கும் இஸ்ரேல் - கடற்கரைகளில் குவிந்த மக்கள்

இஸ்ரேல் நாட்டில் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மக்கள் கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர்.

Update: 2020-05-18 02:48 GMT
இஸ்ரேல் நாட்டில் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மக்கள் கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர். கொரோனா  பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அங்கு 46 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை நிலவி வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு கடற்கரைகளில் குவிந்து வருகின்றனர். வரும் 20 ஆம் தேதி தான் கடற்கரைகளில் மக்களுக்கு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட உள்ள நிலையில், அவற்றை எல்லாம் மக்கள் கண்டு கொள்ளாமல் வெப்பத்தை தணிக்க கடலில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இந்த வெப்ப நிலை அடுத்த வாரம் இறுதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்