உயிர் குடித்த `ஷிகெல்லா' அரக்கன்.. - 8 வயது சிறுமி பரிதாபபலி

Update: 2024-05-04 17:21 GMT

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே ஷிகெல்லா நோய் பாதித்து 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். கடம்பநாடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவரது மகள் அவந்திகா, தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமிக்கு வயிற்றுப்போக்கும்,வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து அடூரிலுள்ள அரசு மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். ஷிகெல்லா நோய் பாதித்தது தான் மரணத்திற்கு காரணம் என்று கோட்டயம் மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. அசுத்தமான குடிநீர் மூலம் இந்த பாக்டீரியா உடலில் பரவுகிறது. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடம்பநாடு பகுதியில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்