முழு ஊரடங்கு... சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு செய்த கலெக்டர்!

புதுக்கோட்டையில் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-01-09 22:13 GMT
புதுக்கோட்டையில் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி, புதுக்கோட்டையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முககவசம் அணியாமல் வந்தவர்களை முககவசம் அணியக் கூறி அறிவுறுத்தியதோடு கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாரிடம் ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்