ரயிலில் பறிபோன கர்ப்பிணி உயிர்- இறந்த தாய்-7 மாத சிசு ஒன்றாக தகனம் -நெஞ்சங்களை கலங்கடிக்கும் கொடுமை

Update: 2024-05-04 17:08 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த கர்ப்பிணியான கஸ்தூரி, வளைகாப்பிற்காக சென்னையில் இருந்து கொல்லம் விரைவு ரயிலில் சென்றபோது, கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். ரயிலில் அபாய சங்கிலி வேலை செய்யாததால் 8 கிலோமீட்டர் தூரம் தள்ளி ரயில் நின்ற நிலையில், பலத்த காயங்களுடன் கஸ்தூரி சடலமாக மீட்கப்பட்டார். விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் கஸ்தூரியின் உடலுக்கு உடற்கூராய்வு நடைபெற்ற நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு கஸ்தூரியின் உடலில் இருந்து 7 மாத சிசுவும் தனியே எடுக்கப்பட்ட நிலையில், இருவரது உடலுக்கும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இருவரது உடல்களையும் ஒன்றாக வைத்து, மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்