முதலமைச்சர் இன்று நெல்லை பயணம் - கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.
நேற்று திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஆய்வு செய்த அவர், இன்று காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அப்போது, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன், முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
மேலும் விவசாய சங்கங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.