அனுமதி கொடுத்த கேரள உயர்நீதிமன்றம்.. ஆய்வுக்கு சபரிமலை விரையும் 2 நீதிபதிகள் | Kerala

Update: 2024-05-05 07:13 GMT

சபரிமலை சன்னிதானத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக 2 கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் செல்ல உள்ளனர்.. சபரிமலை சன்னிதானத்தில் உள்ள விருந்தினர் மாளிகையை புனரமைப்பதற்குரிய அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை பரிசீலித்த உயர்நீதிமன்றம், 2 உயர் நீதிமன்ற நீதிபதிகளை சபரிமலை சன்னிதானத்திற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் 8ம் தேதி நீதிபதிகளான அணில் கே நரேந்திரன், ஹரி சங்கர் மேனோன் ஆகிய இருவரும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்... உயர் நீதிமன்றம் அனுமதி அளிக்கும் நிலையில் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் செலவில் விருந்தினர் மாளிகை புனரமைக்கும் பணி துவங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்