மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு | Mayor | Kerala

Update: 2024-05-05 07:11 GMT

மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு | Mayor | Kerala

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன் மற்றும் அவரது கணவரும் சட்டமன்ற உறுப்பினருமான சச்சின் தேவ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் மேயர் ஆர்யா சென்ற காருக்கு வழி விடாமல் அரசுப் பேருந்து ஒன்று சென்றுள்ளது... விபத்தை ஏற்படுத்தும் வகையில் வளைந்து வளைந்து சென்றதாகக் கூறப்பட்ட நிலையில் மேயர் ஆர்யா ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தனது பணிக்கு இடையூறு செய்ததாக மேயர் ஆர்யா மீது ஓட்டுநர் புகாரளித்தார். மேயர் ஆர்யா, அவரது கணவர் சச்சின் தேவ், அவர்களுடன் காரில் பயணித்த 3 பேர் மீது நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்