தொடங்கியது 37 மணி நேர தளர்வுகளற்ற லாக்-டவுன்
கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 37 மணி நேரம் தளர்வுகளற்ற ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 37 மணி நேரம் தளர்வுகளற்ற ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு செயல்பாட்டில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமையான இன்று மாநிலம் முழுவதும் தளர்வற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதுபான கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருச்சி சாலை, புலியகுளம் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணபட்டது.