நெஞ்சில் அடித்து கதறும் மக்கள்.. பதறியடித்து ஓடி வந்த திருமா - "இத ஏத்துக்கவே முடியாது.."

Update: 2024-05-07 07:57 GMT

திருவேற்காட்டில் கூவம் ஆற்றங்கரையில் வீடுகளை காலி செய்வது குறித்த பிரச்சினையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெருமாள் கோயில் தெருவில் உள்ள வீடுகள் ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு எனக்கூறி, அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று மக்களிடம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆற்றின் குறுக்கே கட்ட‌டங்களை கட்டியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்