"திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்?" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
"திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்
இதையடுத்து, கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 14 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் என வினவினார். மேலும், தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் முதல்வர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். அப்போது பதில் கூறிய எதிர்க்கட்சித்துணை தலைவர் துரைமுருகன், அன்றைய தினம், மத்திய அரசும் மாநில அரசும் எதிரும், புதிருமாக இருந்ததாக கூறினார்.