சவுக்கு சங்கர் விவகாரம் - சிக்கப்போகும் அடுத்த முக்கிய புள்ளி

Update: 2024-05-07 12:26 GMT

தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் உட்பட 3 பேர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே 2 பேர் பெரியகுளம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 4வது குற்றவாளி கைது செய்யப்பட்டார். கமுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மகேந்திரன், சவுக்கு சங்கருக்கு கஞ்சா விற்பனை செய்ததாகவும், மகேந்திரனை பிடிக்க சென்றபோது அவரிடம் 2.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வழக்கில் கூடுதல் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், மகேந்திரன் கொடுத்த தகவல்களின் பேரில் இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்