சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

Update: 2020-02-09 11:51 GMT
தேரோட்டத்தை முன்னிட்டு சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா  நடைபெற்றது. திருச்சி சமயபுரம் கோவிலில் எழுந்தருளுவதற்கு முன்பு, மாரியம்மன் இனாம் சமயபுரத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனால் அங்குள்ள கோவில் ஆதி மாரியம்மன் கோவில் என்றழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி, தேரோடும் வீதி வழியாக பூக்கள் கொண்டு வரப்பட்டு, சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு சாத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். 

 

Tags:    

மேலும் செய்திகள்