பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.