பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-06 03:06 GMT
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட  முக்கிய இடங்களில் இரவு முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.  மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்