திடீர் ரெய்டு.. சமையல் எண்ணெய்யில் காத்திருந்த அதிர்ச்சி - ஆடிப்போன அதிகாரிகள்

Update: 2024-04-28 08:07 GMT

தென்காசி அருகே ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட 323 கிலோ உணவுப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தென்காசி, குற்றாலம், மேலகரம், வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, குற்றாலம் அடுத்த வல்லத்தில் உள்ள திண்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, ரசாயன பொருட்கள் கலந்து தயாரிக்கப்பட்ட 323 கிலோ உணவுப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்ட தரமற்ற சுமார் 40 லிட்டர் சமையல் எண்ணெயையும் அதிகாரிகள் அதிரடியாக கைப்பற்றி அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்