புதுச்சேரி சிறுமி உடல் கிடந்த இடத்தில் மீண்டும் பரபரப்பு - கூட்டமாக நின்ற இளைஞர்கள் பாக்கெட்டில்..?

Update: 2024-04-28 08:15 GMT

புதுச்சேரியில் சிறுமி படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இடத்தில் போலீசார் திடீரென சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட பாப்பம்மால் கோவில் சுடுகாடு, பேய் பங்களா, சின்னையாபுரம், டி.வி.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அப்பகுதியில் கூட்டமாக இருந்த இளைஞர்களின் பாக்கெட்டுகளில் கஞ்சா பொட்டலங்கள் உள்ளதா? எனவும் சோதனை நடத்திய போலீசார் அவர்களுக்கு அறிவுரை கூறினர். மேலும் 9-வயது சிறுமி கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட வாய்க்காலிலும் போலீசார் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்