விசாரணைக்கு சென்று வந்தவர் திடீர் மரணம் - தென்காசியில் பகீர்

Update: 2024-04-28 08:11 GMT

தென்காசி அருகே, விசாரணைக்காக காவல்நிலையம் சென்றுவந்த முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உடலுடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த முதியவர் தங்கதுரை மற்றும் அவரது மகள் அன்பு ஆகியோரை சொத்து தகராறு தொடர்பான விசாரணைக்காக கடந்த 24-ம் தேதி போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். நாள் முழுவதும் காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்டிருந்த தங்கதுரைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட தங்கதுரையின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தென்காசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு போலீசாரே காரணம் என குற்றம்சாட்டிய உறவினர்கள், தங்கதுரை உடலுடன் காவல்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்