அரசியல் களத்தில் திடீர் புயலை கிளப்பிய ஈபிஎஸ்

Update: 2024-04-28 08:25 GMT

கோடை கால விளையாட்டுப் பயிற்சி முகாமிற்கு பள்ளி மாணவர்களிடம் தமிழக அரசு கட்டணம் வசூலிப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சென்னையில் 500 ரூபாயும், பிற மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்ட வேண்டும் என்று, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில், இது விளையாட்டில் ஆர்வமுள்ள துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் செயல் என்று, ஈ.பி.எஸ். விமர்சித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், வழக்கம் போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்