"விஜயதசமி - அரசு பள்ளிகளை திறக்க வேண்டும்" : மாணவர் சேர்க்கை நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, நாளை திறந்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-10-07 06:50 GMT
விஜயதசமி நாளில் கல்வியை துவங்கினால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதால், நாளை அதிகளவில் குழந்தைளை பள்ளிகளில் சேர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை கருத்தில்கொண்டு, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நாளை திறந்து வைத்திருக்க வேண்டுமென்றும், குழந்தைகளை எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் முன்வந்தால், ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்