உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் - தமிழிசை

உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-03 12:48 GMT
தமிழக அரசு நல்லது செய்தால் பாரட்டுவோம் என்றும், பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் அதனை சுட்டிகாட்ட தயங்க மாட்டோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பாஜகவில் இணைந்தவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்