மீண்டும் அதிமுகவில் ஐக்கியம் ஆனார், பிரபு
கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு, சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.
கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு, சென்னை - தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். அதிருப்தி அணியில் இருந்த இரு எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கலைச்செல்வன் இருவரும் ஏற்கனவே, அதிமுகவில், தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்ட நிலையில், கள்ளக்குறிச்சி பிரபுவின் இந்த சந்திப்பு, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியுடன் கள்ளக்குறிச்சி பிரபு சந்தித்த போது, துணை முதலமைச்சர்
ஓ. பன்னீர் செல்வம் உடனிருந்தார்.