பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை : சி.சி.டி.வி. கேமிராவையும் கழற்றி சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2019-01-18 12:47 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் அரசு ஒப்பந்ததாரக பணிபுரியும் முகமது ரசிம் என்பவர் தனது குடும்பத்தோடு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா சென்றிருந்தார். அவர் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த 50 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவையும் கொள்ளையர்கள் கழற்றி சென்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்