ஈபிஎஸ் கிளப்பிய பரபரப்பு.. தேர்தல் ஓய்ந்த பின் தமிழகத்தில் மீண்டும் பற்றும் தீ

Update: 2024-05-08 08:08 GMT

திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி, சாதனை அல்ல வேதனை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்றும், அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பலனளிக்கும் எதையும் நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். மேலும் மின் கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல வரி உயர்வுகளையே திமுக அரசு மக்களுக்கு பரிசாக அளித்துள்ளதாகவும், தமது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்