உடல்நல குறைவால் உயிரிழந்த விமானப்படை ஊழியர்

தருமபுரியில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த விமானப்படை ஊழியரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2018-12-14 10:38 GMT
மதிகோன்பாளையத்தை சேர்ந்த அன்பரசு என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் விமானப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் உடல்நல குறைவால் அவர் உயிரிழந்த நிலையில், அவரது உடல்  டெல்லயில் இருந்து  விமானம் மூலம்  மதிகோன்பாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு,  தேசிய கொடி அணிவித்து 21 குண்டுகள் முழங்க அன்பரசுவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்