போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை - விஜயகாந்த்

கஜா புயல் காரணமாக, ஐம்பதாண்டு கால வாழ்வாதாரத்தை இழந்ததாக, தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்

Update: 2018-11-20 11:30 GMT
கஜா புயல் காரணமாக, ஐம்பதாண்டு கால வாழ்வாதாரத்தை இழந்ததாக, தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயல் பாதிப்புக்குள்ளான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிகவினர் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்ததாக கூறியுள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக உதவிட வேண்டும் என்றும் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்