"தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2018-10-22 11:21 GMT
இலங்கை மற்றும் அதை  ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்தாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரம், விழுப்புரம் மாவட்டம் வானூர் ஆ​கிய இடங்களில் அதிகபட்சமாக தலா 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்